Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தாம்பரம்: சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டல பரங்கிமலை காவல் மாவட்டம் மற்றும் தாம்பரம் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் தாம்பரம் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் தாம்பரம் உதவி ஆணையாளர் அசோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பரங்கிமலை துணை காவல் ஆணையாளர் பிரபாகரன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மேலும் தாம்பரம் சரக உதவி ஆணையாளர் அசோகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தாம்பரம் ஆய்வாளர் ஆல்வின் குரோம்பேட்டை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்டு காவலர் மற்றும் காவலர் குடும்பத்தினர் இலவச கண் புரை நீக்கும் அறுவை சிகிச்சைக்கான ஒப்புதல் சீட்டு மற்றும் கண் பார்வை குறித்த பரிசோதனைகள் பிளட் பிரஷர் ரத்தப் பரிசோதனை, கண் கண்ணாடி போடுவதற்கான முழு பரிசோதனை அனைத்தும் செய்யப்பட்டது.